உள்ளூர் செய்திகள்
பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்தபடம்.

கிருஷ்ணகிரியில் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-30 13:23 IST   |   Update On 2022-04-30 13:23:00 IST
கிருஷ்ணகிரியில்ப ட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். 

மாவட்ட செயலாளர் விஜயன்,மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜா ஆகியோர்முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஹரி சிறப்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பணியிடத்தை நிரப்புதல் மற்றும் பொது மாறுதல்கலந்தாய்வு மூலம் கூடுதல் பணியிடத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்குகடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். கடந்தஇரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்புச் சட்டம்ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் கோவிந்தசாமி, வெங்கடேசலு,ராஜ்குமார், மாவட்ட இணைச் செயலாளர்கள் ராமலிங்கம், சிவக்குமார், சுபாஷ்,மாவட்ட மகளிரணி செயலாளர் கலைவாணி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் தமிழரசி,மாநில பொதுக்குழு உறுப்பினர் மயிலழகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News