உள்ளூர் செய்திகள்
புதுவையில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது. கடந்த ஒரு மாதமாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்ப டியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் 263 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 7, காரை க்காலில் 2, ஏனா மில் ஒருவர் என 10 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். ஏனாமில் ஒருவர் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுவையில் ஒட்டுமொத்தமாக 11 பேர் தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 16 லட்சத்து 81 ஆயிரத்து 629 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முககவசம் அணியவும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.