உள்ளூர் செய்திகள்
செங்கம் அருகே 4,800 கிலோ ரேசன் அரிசி, லாரி பறிமுதல்
செங்கம் அருகே 4,800 கிலோ ரேசன் அரிசி, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கம்:
திருவண்ணாமலையில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ேபாலீஸ் சுப்பிரண்டு தகவல் கிடைத்தது. அதன் ேபரில் பவன்குமார்ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் அடுத்த ஆனந்தவாடி காவல்சோ தனைச்சாவடியில் நடத்திய வாகன சோதனையில் லாரியில் கடத்தப்பட்ட 4800 கிலோ ரேசன் அரிசியை மடக்கி பிடித்தனர்.
மேலும் விசாரணை நடத்தியில் திருவண்ணாமலையில் இருந்து நாமக்கலில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேசன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. 40 கிலோ எடைகொண்ட 120 அரிசி மூட்டைகளும், கடத்தல் லாரியையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ேபாலீஸ் சுப்பிரண்டு ஆர்.சுந்தராம்பாளிடம் ஒப்படைக்கப்பட்டது.