உள்ளூர் செய்திகள்
இளம் வக்கீல்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவித் தொகை-ரங்கசாமி வழங்கினார்
இளம் வக்கீல்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவித் தொகையை ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சட்டத்துறை மூலம் புதுவைவக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் புதிதாக 17 இளம் வக்கீல்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில்நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி 17 இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகையை வழங்கினார். நிகழ்ச்சியின் போது சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், சட்டத்துறை செயலர் மற்றும் துணை செயலர் மற்றும்வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமிநாராயணன் இணை செயலாளர் திருமலைவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.