உள்ளூர் செய்திகள்
.

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

Published On 2022-04-29 12:55 IST   |   Update On 2022-04-29 12:55:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாயக்க னூர் புதூர்  கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (வயது 70) என்பவர் கஞ்சா விற்பதாக சிங்காரப்பேட்டை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்ததில் குமரேசன் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 850 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து குமரேசனை கைது செய்தனர்.

Similar News