உள்ளூர் செய்திகள்
மனுநீதி நாள் முகாம் நடந்த போது எடுத்த படம்.

போளூரில் மனுநீதி நாள் முகாம்

Published On 2022-04-28 16:05 IST   |   Update On 2022-04-28 16:05:00 IST
போளூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் கஸ்தம்பாடி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மனுநீதி முகாமில் திருவண்ணாமலை ஆதி திராவிடர் நல அலுவலர் பார்த்திபன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

போளூர் தாசில்தார் சண்முகம் முன்னிலை வகித்தார், தாசில்தார் அருள், வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கிராம நிர்வாக அலுவலர்கள், மணிகண்டன், தமிழ்ச்செல்வி, அருண் குமார், அன்பழகன், மீனா, துணை வேளாண்மை அலுவலர்கள் சதீஷ்குமார், ராமு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, கஸ்தம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பவுன் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டது. மொத்தம் 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Similar News