உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வேப்பனப்பள்ளி அருகே 5 வயது குழந்தை சாவு

Published On 2022-04-28 14:58 IST   |   Update On 2022-04-28 14:58:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.
கிருஷ்ணகிரி,
 
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பண்டி குறி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது 5 வயது மகள் கீர்த்தி, கடந்த 22-ந்தேதி வீட்டின் பின்புறத்தில் விளையாடிக்கொண்டி ருந்தாள். 

அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News