உள்ளூர் செய்திகள்
லஷ் சோர்ஸ் நிறுவனத்துடன் எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-04-28 14:55 IST   |   Update On 2022-04-28 14:55:00 IST
லஷ் சோர்ஸ் நிறுவனத்துடன் எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் லஷ் சோர்ஸ் நிறுவனம் மென்பொருள் சேவைகள் வழங்கும் அறிவுரை சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு த்திட்ட நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், கல்லூரி துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கல்லூரி ஐ.ஓ.டி. துறை தலைவர் பூங்குழலி, வேலை வாய்ப்புதுறை அதிகாரி ஜெயகுமார், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் லஷ் சோர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கவிதா செந்தில் நாதன், ரோஷனாரா பானு, திலீப்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News