உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே தவறி விழுந்த தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள பீர் பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது42). இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சோமநாதபுரம் என்ற பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.