உள்ளூர் செய்திகள்
.

அரசு பள்ளி ஆசிரியரை மிரட்டிய வாலிபர் கைது

Published On 2022-04-28 13:42 IST   |   Update On 2022-04-28 13:42:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்ரானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 19).
 இவரது தம்பி தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளியில் தனது தம்பிக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த வேதியியல் ஆசிரியர் சீனிவாசன் (39) 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்துள்ளார். 

இதை அறிந்த அருணாச்சலம் தன் நண்பருமான சக்திவேல் என்பவருடன் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சீனிவாசனை பணி செய்ய விடாமல் தடுத்து அவரை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார். 

அதன்பேரில் வழக்குபதிவு செய்து அருணாச்சலத்தை போலீசார் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வரு கின்றனர்.

Similar News