உள்ளூர் செய்திகள்
கீழ்பென்னாத்தூரில் ஏ.டி.எம். கண்ணாடி உடைப்பு
கீழ்பென்னாத்தூரில் ஏ.டி.எம். கண்ணாடி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் சாணிப்பூண்டி செல்லும் சாலையில் வங்கி ஏ.டி.எம். எந்திரம் ஒன்று உள்ளது.
இதனை, வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் ஏ.டி.எம். எந்திரம் உள்ள அறையின் அருகே சத்தம் கேட்டது.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் உள்ள அறையின் முன்புற கண்ணாடி உடைந்திருந்தது. இது குறித்து வங்கி கிளை மேலாளர் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் வங்கியில் உள்ள கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.