உள்ளூர் செய்திகள்
பிரதமர் மோடியுடன் காணொலியில் ரங்கசாமி ஆலோசனை
கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் காணொலியில் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். புதுவை சட்டசபையில முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமைச் செயலர் அஸ்வனி குமார், அரசு செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுவையில் கொரோனா பரவலின் தற்போதைய நிலைமை குறித்தும், புதுவையில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வருங்காலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், இதுவரையில் எவ்வளவு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது என்ற விபரங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.