உள்ளூர் செய்திகள்
.

ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 5 பேர் கைது

Published On 2022-04-26 15:59 IST   |   Update On 2022-04-26 15:59:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பேஸ்10 பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 69). ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். இவரது மகன் கார்த்திக் (30), என்பவருக்கும், ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகள் சந்தியா (25) என்பவருக்கும், கடந்த 2018 ல் திருமணம் நடந்தது. 

அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால், தம்பதிகள் திருமணமான 2 மாதங்களில் பிரிந்தனர். தற்போது தனித் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம், நாகராஜன் வீட்டுக்கு சென்ற அவரது மருமகன் சந்தியா, நகைகளை திருப்பி தருமாறு கேட்டார்.

 தன்னிடம் எந்த நகையும் இல்லை என நாகராஜன் கூறினார். இதனால் அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜனை கையால் தாக்கினர்.

இது தொடர்பாக, அவரது புகாரின் பேரில் பிரபாகரன் (30), அவரது தந்தை ஜெயபிரகாஷ் (53), தாய் பிருந்தா (47), தங்கைகள் சந்தியா (25), அர்ச்சனா (23), ஆகிய 5 பேர் மீது ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.

Similar News