உள்ளூர் செய்திகள்
விழாவில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் சிறு தொழில் தொடங்க பெண்களுக்கு கருவிகள் வழ

விவசாயிகள் திருவிழா

Published On 2022-04-26 14:24 IST   |   Update On 2022-04-26 14:24:00 IST
புதுவை வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் திருவிழா கண்காட்சியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத் தின் வரிசையில் மத்திய வேளாண் அமைச்சகம் விவசாயிகள் கூட்டு பங்கேற்பு எங்கள் முன்னுரிமை என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்ட மிட்டுள்ளது.

நாடு முழுவதும் 731 வேளாண் அறிவியல் நிலையங்களில் விவசாயிகள் திருவிழாவை நடத்துகிறது. நாட்டில் முதல்முறையாக தொடங்கப்பட்ட புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் திருவிழா இன்று நடந்தது. 

திருவிழா, கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயகுமார் தொடங்கி வைத்தார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார், விவசாயிகள் நலத்துறை இயக்குனர் பாலகாந்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன், கரிக்காலன் வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ், வேளாண் தொழில்நுட்ப முகமை திட்ட இயக்குனர் வசந்தகுமார், கால்நடைக்கல்லூரி முதல்வர் முருகவேல், பூச்சியியல் வல்லுநகர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடக்கவிழாவில் மத்திய வேளாண் அமைச்சரின் இணையவழி நேரலை ஒளிபரப்பு செய்யப் பட்டது. தொடர்ந்து விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், கருத்தரங்கு நடந்தது. விவசாய கண்காட்சியில் உயிரக பூச்சி, நோய் மேலாண்மை இடுபொருட்கள், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் விளைபொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன. 

காய்கறி, பழங்கள் மதிப்பு கூட்டுதல், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்ற பெண்களுக்கு சிறுதொழில் தொடங்க ரூ.3 ஆயிரம் மதிப்பிலான எடை, சீலிங் கருவிகள் வழங்கப் பட்டது. எண்ணைவித்து பயிர்கள், சிறுதானிய பயிர்கள், ஊட்டமேற்றிய பயிர்கள் என்ற தலைப்பில் தொழில்நுட்ப அமர்வு நடத்தப்பட்டது.

Similar News