உள்ளூர் செய்திகள்
ஆனந்தபுரம் அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
புதுச்சேரி:
ஆனந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் செந்தில் வரவேற்புரையாற்றினார்.
தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளித் துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வென்றவர் களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் சின்னராசு தொகுப்புரை வழங்கினார். ஆசிரியர் ராஜேஷ் நன்றியுரையாற்றினார். ஆசிரியைகள் கல்பனா, மணிமேகலை ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.