உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா

Published On 2022-04-26 14:02 IST   |   Update On 2022-04-26 14:02:00 IST
புதுவையில் 3 பேருக்கு கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது.

கடந்த ஒரு மாதமாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் 264 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். புதுவையில் 5, காரைக்காலில் ஒருவர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். ஏனாமில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

புதுவையில் ஒட்டுமொத்தமாக 7 பேர் தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ்  உட்பட 16 லட்சத்து 77 ஆயிரத்து 21 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 
இத்தகவலை   சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Similar News