உள்ளூர் செய்திகள்
.

பள்ளி நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது

Published On 2022-04-26 12:53 IST   |   Update On 2022-04-26 12:53:00 IST
கிருஷ்ணகிரி அருகே பள்ளி வளாகத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அருகே மோட்டூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 23 ந் தேதி இரவு 3 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். 
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பள்ளியின் நிர்வாகி புவியரசன் மது குடித்து கொண்டிருந்த வாலிபர் களை தட்டிக் கேட்டார். 

அப்போது அவர்கள் ஆபாசமாக திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.இது குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸ் நிலையத்தில் புவி யரசன் புகார் செய்தார்.

 அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மது குடித்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சின்ன தம்பி (வயது21) கோவிந்தராஜ் (20) விஜயகுமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News