உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கேண்டீன் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2022-04-26 10:09 IST   |   Update On 2022-04-26 10:09:00 IST
ஐஸ் கிரீமுக்கு காசு கேட்டதால் தியேட்டர் கேண்டீன் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் வாட்டார் டேங்க் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது55). இவர் திருக்கனூர்-திருவண்ணாமலை ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கடந்த 15  ஆண்டுகளாக கேண்டீன் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இரவு காட்சி இடைவேளையின் போது திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்தலம்பட்டு காலனியை சேர்ந்த ஆசிக்(19), சூர்யா(25) மற்றும் பன்னீர் செல்வம் (21) ஆகியோர் கண்ணனிடம் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டனர். அப்போது ஐஸ் கிரீமுக்கு காசு கொடுக்கும்படி கண்ணன் கேட்டார். 

அதற்கு எங்களிடமே காசு கேட்கிறாயா? என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி கண்ணனை தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.

இதுகுறித்து கண்ணன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிக் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News