உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மளிகை கடையை சூறையாடிய வாலிபர்

Published On 2022-04-26 10:01 IST   |   Update On 2022-04-26 10:01:00 IST
திப்புராயப்பேட்டையில் மளிகை கடையை சூறையாடிய பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை திப்புராயபேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி அருள்மேரி(வயது54). இவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடைக்கு திப்புராயப்பேட்டை அந்தோணியார் தெருவை சேர்ந்த குணா என்ற வாலிபர் அடிக்கடி வந்து தகராறு செய்வார்.

இந்த நிலையில்  அருள்மேரி மளிகை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த குணா மளிகை கடையை மூடுமாறு கூறி தகராறு செய்தார்.

அருள்மேரி மளிகை கடைடைய மூட மறுக்கவே ஆத்திரமடைந்த குணா கையில் வைத்திருந்த இரும்பு பைப்பால் மளிகை கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்.

மேலும் அருள்மேரியையும் இரும்பு பைப்பால் குணா தாக்கினார். இதனால் அருள்மேரி வலி தாங்காமல் அலறினார். இதனைகேட்டு அவரது மகன் ஜான்பாஷா, மருமகள் ராணி ஆகியோர் குணாவிடம் தட்டிக்கேட்டனர். அவர்களையும் குணா தாக்கினார். அதோடு 3 பேரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.

அப்போது அங்கு கூட்டம் திரளவே குணா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்த அருள்மேரி, அவரது மகன் ஜான்பாஷா, அவரது மருமகள் ராணி ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து அருள்மேரி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குணாவை தேடி வருகிறார்கள்.

கரிக்கலாம்பாக்கம் அருகே கோர்க்காடு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முத்து (வயது49). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் மகன் மணவாளன் (25) என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில்  முத்து தனது மனைவி மற்றும் மகள்களுடன் வீட்டில் இருந்த போது அங்கு வந்த மணவாளவன் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை உடைத்து சேதப்படுத்திவிட்டு முத்துவை கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றார்.

இதுகுறித்து முத்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News