உள்ளூர் செய்திகள்
முள்ளோடையில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.

சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-04-25 08:53 GMT   |   Update On 2022-04-25 08:53 GMT
முள்ளோடையில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை மாநில எல்லை பகுதியான முள்ளோடை பரிக்கல்பட்டு சாலையில் பெருமாள் கார்டனில் குரு சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 21-ந் தேதி கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து வாஸ்து சாந்தி, அங்குரார்ப் பணம், யாகசாலை பூஜை ஹோமம்,  9.00 மணிக்கு அஷ்டபந்தனம் சமர்பித்தல், பிம்பசுத்தி ரக்ஷாபந்தனம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான 6 மணிக்கு 2-வது கால யாக பூஜை, மூலமந்தர ஹோமம், 9.00 மணிக்கு யாத்ராதானம், 9.15 மணிக்கு கடம் புறப்பாடு, 10.10 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு சாய்பாபாவுக்கு மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடந்தது.

இதில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, புதுவை பாலா அறக்கட்டளை தலைவர் சாமிநாதன், பொருளாளர் கோகுல்ராஜ், கோமதி, முரளீஸ்வரன் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News