உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி வளர்ச்சிக்கு உள்துறை உதவ வேண்டும்- நாராயணசாமி கடிதம்
புதுவையின் வளர்ச்சிக்கு மத்திய உள்துறை மந்திரி உதவ வேண்டும் முன்னாள் முதல்&அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:&
சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்முறையாக புதுவைக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. அரசு கவிழ்க்கப்பட்டது. அதன்பின்னணயில் யார் இருந்தார்கள் என்ற விஷயத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியும், நீங்களும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்தால் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தீர்கள். சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
பெஸ்ட் புதுவையாக மாற்றுவோம் என பிரதமர் மோடி கூறினார். தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மாநில அரசு 5சதவீத நிதியைக்கூட கூடுதலாக பெறவில்லை. 1.6 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு கூடுதலாக வழங்கியுள்ளது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், நிதிக்கமிஷனில் சேர்க்க வேண்டும். ரூ.8 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மாநில அரசுகளுக்கு 41 சதவீத நிதி வழங்கும்போது, புதுவைக்கு மட்டும் 22 சதவீதம்தான் தரப்படுகிறது.
புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் மாபெரும் வளர்ச்சி தேவைப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்டு புதுவையின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. நான் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை மாநில அந்தஸ்து, நிதி அதிகாரம், கூடுதல் நிதி குறித்து தங்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.
பிரதமருக்கும் பலமுறை கடிதம் எழுதினேன். மாநில அரசுக்கு தொல்லை கொடுக்கும் கவர்னர் கிரண்பேடியை மாற்ற வலியுறுத்தினேன். அப்போது ராணுவ அதிகாரியை புதுவை கவர்னராக நியமிப்பதாக வாக்குறுதியளித்தீர்கள். ஆனால் உங்கள் வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. வளர்ச்சி, கட்டமைப்பு, கூட்டுறவு நிறுவனங்கள், ஆலைகள் புனரமைப்பு என நாங்கள் பல விஷயங்களை கோரினோம். ஆனால் தீர்வு இப்போது வரை கிடைக்கவில்லை.
பல ஆண்டாக அரசின் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் விரைவுபடுத்தவில்லை. மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் புதுவை மாநில வளர்ச்சிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.