உள்ளூர் செய்திகள்
பூ கரகம் நிகழ்ச்சி நடந்த காட்சி.

திரவுபதி அம்மன் பூ கரகம் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Published On 2022-04-23 15:11 IST   |   Update On 2022-04-23 15:11:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் -திரவுபதி அம்மன் பூ கரகம் நிகழ்ச்சி நடைபெற்றது
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அருகே உள்ள டி, கொத்தபள்ளி கிராமத்தில் துரோபதி அம்மன், தர்மராஜ்சுவாமி கோவில் உள்ளது. 

இக் கோவில் தேரோட்டம் கடந்த 20 ந் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் பூசாரி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுமந்தவாறு கோவில் முன்பு ஆடினார். 

இதில் டி,கொத்தபள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News