உள்ளூர் செய்திகள்
கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பஸ் நிலையம்- அமித் ஷா நாளை அடிக்கல் நாட்டுகிறார்
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்படுகிறது. இந்த பணியை மத்திய மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வருகிறார்.
இன்று இரவு சென்னை ஆவடியில் தங்குகிறார். அங்கிருந்து காலை 9 மணிக்கு ஹெலிகாப்டரில் புதுவைக்கு புறப்படுகிறார்.
புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு வந்திறங்குகிறார். அவரை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அவர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார். அங்கு பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதனை தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று அரவிந்தர், அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து 11 மணிக்கு புதுவை பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.
அங்கு அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் 12.40 மணிக்கு கவர்னர் மாளிகை வருகிறார். அங்கு மதிய உணவருந்தி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். 2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 390 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு பணி ஆணை வழங்குகிறார். குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிக்கல் நாட்டுவது உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்படுகிறது. இந்த பணியை மத்திய மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து 3.45 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வருகிறார்.
அங்கு எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து 5 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.
மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி புதுவை நகர் முழுவதும் பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் கொடி, பேனர், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் 5 இடங்களில் அமித் ஷாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமித் ஷா வருகையையொட்டி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் பயண வழி நெடுகிலும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்கள், பா.ஜனதா அலுவலகம் ஆகியவைகளில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. வழிகெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
அமித் ஷா வருகையையொட்டி விடுதிகளில் தங்கியிருப்போர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வருகிறார்.
இன்று இரவு சென்னை ஆவடியில் தங்குகிறார். அங்கிருந்து காலை 9 மணிக்கு ஹெலிகாப்டரில் புதுவைக்கு புறப்படுகிறார்.
புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு வந்திறங்குகிறார். அவரை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அவர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார். அங்கு பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதனை தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று அரவிந்தர், அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து 11 மணிக்கு புதுவை பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.
அங்கு அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் 12.40 மணிக்கு கவர்னர் மாளிகை வருகிறார். அங்கு மதிய உணவருந்தி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். 2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 390 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு பணி ஆணை வழங்குகிறார். குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிக்கல் நாட்டுவது உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்படுகிறது. இந்த பணியை மத்திய மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து 3.45 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வருகிறார்.
அங்கு எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து 5 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.
மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி புதுவை நகர் முழுவதும் பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் கொடி, பேனர், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் 5 இடங்களில் அமித் ஷாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமித் ஷா வருகையையொட்டி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் பயண வழி நெடுகிலும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்கள், பா.ஜனதா அலுவலகம் ஆகியவைகளில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. வழிகெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
அமித் ஷா வருகையையொட்டி விடுதிகளில் தங்கியிருப்போர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.