உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

நாம்நமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-22 14:12 IST   |   Update On 2022-04-22 14:12:00 IST
ஊர்வலத்தில் கியாஸ் சிலிண்டரை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றனர்.
புதுச்சேரி:

நாம் தமிழர் கட்சி சார்பில்  ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லிதோப்பு சுப்பையா சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

 மாநில பொருளாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மறைமலையடிகள் சாலை அண்ணாசாலை, வழியாக சென்று ராஜா தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம்  நடந்தது.

இளைஞர் பாசறை  ஞானப்பிரகாசம், மணி பாரதி, மகளிர் பாசறை கவுரி, பிரவிணா, தேவிகா, பிரியாலட்சுமி, சுபஸ்ரீ, தமிழ்ச்செல்வன், தொகுதி நிர்வாகிகள் காமராஜ், பிரியன், நிர்மல், கலிவரதன், செந்தமிழன், அய்யனார், கருணாநிதி, சுந்தர், மதியழகன், தொழிற்சங்க நிர்வாகிகள் ரமேஷ்,  தமிழ்ச்செல்வன் உள்ளிட் டோர்  பங்கேற்றனர்

கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊர்வலத்தில் கியாஸ் சிலிண்டரை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றனர்.

Similar News