உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்- ஓம்சக்திசேகர் அழைப்பு
அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று ஓம்சக்திசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா ஆசியோடு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைப்படி புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. பகுதிக்கு உட்பட்ட வார்டு, தொகுதி, நகரம், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முருகமணி ஆகியோரின் தலைமையில் வார்டு அ.தி.மு.க. வுக்கு நாளை (சனிக்கிழமை), தொகுதி, நகரம், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப் பினர்கள் தேர்தல் (ஞாயிற்று கிழமை) லட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் ஓம்சக்தி என்.எஸ்.போஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும்.
அ.தி.மு.க.நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அமைப்பு தேர்தலில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.