உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

விபத்தில் கணவன்-மனைவி காயம்

Published On 2022-04-22 05:12 GMT   |   Update On 2022-04-22 05:12 GMT
மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி:

புதுவை மூலகுளம் திருமலைத் தாயார் நகரை சேர்ந்தவர் கேணியப்பன் (வயது58). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி இந்திராகாந்தியுடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டிருந்தார். 

மறைமலை சாலையில் வந்த போது ஒருவழி சாலையில் வந்த கடலூர் மாவட்டம் உடலப்பட்டு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கேணியப்பன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேணியப்பன் மற்றும் அவரது மனைவி இந்திராகாந்தி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். 

அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து புதுவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வில்லியனூர் சிவகணபதி நகரை சேர்ந்தவர் துரைராஜ் வயது 65).  இவரும் இவரது மனைவி கவுரி (55) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தைலாபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்தனர். 

வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் வந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டர் சைக்கிள் திடீரென துரைராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த துரைராஜ் அவரது மனைவி கவுரி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மூலகுளத்தில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை முருங்கப்பாக்கம் பாண்டியன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது தாயார் மல்லிகாவுடன்(60) மோட்டார் சைக்கிளில் மேட்டுப் பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். குண்டுசாலை-மேட்டுப் பாளையம் மெயின் ரோட்டில் எம்.ஜி.ஆர். நுழைவு வாயில் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த டெம்போ எதிர்பாராத விதமாக மணிகண்டன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தடுமாறி விழுந்த மணிகண்டன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News