உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-04-22 05:08 GMT   |   Update On 2022-04-22 05:08 GMT
சாராயம் குடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை உடையார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். (வயது 55). கூலித் தொழி-லாளி இவர் திருமணம் செய்து கொள்ளாமல் அன்-றாடம் சம்பாதிக்கும் பணத்தில் மது குடித்து வந்தார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக முருகேசன் வேலைக்கு எதுவும் செல்-லாமல் தனது தாய் தனலட்சுமி வாங்கும் முதியோர் பென்சன் பணத்தை அடிக்கடி கேட்டுசென்று சாராயம் குடித்து வந்தார். 

அதுபோல்  முருகேசன் சாராயம் குடிப்பதற்காக தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால் தனலட்சுமி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். 

இதனால் விரக்தியடைந்த முருகேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இரும்பு ஷீட் பைப்பில் தனது தாய் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.  இதனை பார்த்த தனலட்சுமி அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவி-யுடன் தூக்கிலிருந்து முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

இது குறித்து முருகேசனின் உறவினர் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News