உள்ளூர் செய்திகள்
உலக நுகர்வோர் தின பிரசாரத்தை அமைச்சர் சாய்.ஜெ.சவரணன்குமார் தொடங்கி வைத்த காட்சி.

நுகர்வோர் தின பிரசாரம்

Published On 2022-04-22 09:46 IST   |   Update On 2022-04-22 09:46:00 IST
உலக நுகர்வோர் தின ஊர்தி பிரசாரம் நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவை அரசு நுகர்வோர் மற்றும் விவகாரங்கள் துறை, ராஜீவ் காந்தி நலச் சங்கம் சார்பில் உலக நுகர்வோர் தின ஊர்தி பிரசாரம் ஊசுடு தொகுதி பத்துக்கண்ணில் நடைபெற்றது.

பிரசாரத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்து நுகர்வோர் கையேடு மற்றும் துண்டு நோட்டீஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவரும், சமூக சேவகருமான நாராயணன் செய்திருந்தார். 

Similar News