உள்ளூர் செய்திகள்
சித்தோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்தோடு:
சித்தோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 25). கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்ராஜ் கோவை யில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சான்றிதழ்கள் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு திருவண்ணா மலையில் இருந்து பஸ்சில் கோவைக்கு வந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பைபாஸ் பகுதியில் எலி மருந்து (விஷம்) குடித்து மயங்கி கிடந் தார். இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து மயங்கி கிடந்த மோகன்ராஜை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மோகன் ராஜ் ஈரோடு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு அங்கு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந் தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் ஏன்? தற் கொலை செய்து கொண் டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.