உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

Published On 2022-04-10 14:58 IST   |   Update On 2022-04-10 14:58:00 IST
பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன்,  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பவானி பழைய பஸ் நிலையம் அருகே ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர்  நின்று கொண்டிருந்தார்.

 அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பவானி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல் (32) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  வடிவேலை  கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News