உள்ளூர் செய்திகள்
வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி பிணமாக மீட்பு, சிறுவனை தேடும் பணி தீவிரம்
பெருந்துறை அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவனை 2-வது நாளாக தீவரமாக தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவனை 2-வது நாளாக தீவரமாக தேடி வருகின்றனர்.
பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் எலையாம் பாளையம் திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவரது மனைவி சந்தியா தேவி (32).
இவர்களுக்கு கீர்த்தனா (10) என்ற மகளும், பரணி தரன் (3) என்ற மகனும் உள்ளனர். கீர்த்தனா காஞ்சிக் கோவில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
சந்தியா தேவி துணி துவைப்பதற்கு தனது மகள் மற்றும் மகனை அழைத்து கொண்டு காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார். அங்கு சந்தியா தேவி படிக் கட்டில் அமர்ந்து துணிகளை துவைத்து கொண்டு இருந்தார். கீர்த்தனா, பரணி தரன் வாய்க்கால் கரையில் உட்கார்ந்து தண்ணீரில் விளையாடி கொண்டி ருந்தனர்.
அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் எதிர் பாராத விதமாக வாய்க் காலில் தவறி விழுந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா தேவி உடனடியாக அவர்களை காப்பாற்ற வாய்க்காலுக்குள் இறங்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சந்தியாதேவியை காப்பாற்றினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் வாய்க்காலிலில் தவறி விழுந்த அக்காள் மற்றும் தம்பியை தேடினர். தொடர்ந்து இது குறித்து சந்தியாதேவி உடனடியாக கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது கணவர் மற்றும் பொது மக்களுடன் வந்து சிறுவன் மற்றும் சிறுமியை தேடினர். இதில் அவர்கள் கிடைக்க வில்லை. இதைதொடர்ந்து கண்ணம் வேலம்பாளையம் அருகே எல்.பி.பி. வாய்க் காலில் அத்திக்கடவு அவி னாசி திட்டம் பாலத் திற்கு அருகே கீர்த்தனா பிணமாக மீட்கப்பட்டார்.
ஆனால் சிறுவன் பரணிதரன் கிடைக்க வில்லை. தொடர்ந்து பரணி தரனை தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீ சார் வாய்க்காலில் இறங்கி பரணிதரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இது குறித்து காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்
மேலும் இது குறித்து பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் விசாரணை மேற் கொண்டு வருகிறார்.