உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் எலுமிச்சம்பழம் விலை உயர்ந்தது
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிந்ததால் எலுமிச்சம்பழம் விலை உயர்ந்து கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிந்ததால் எலுமிச்சம்பழம் விலை உயர்ந்து கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோடை காலம் தொடங்கி உள்ளதால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து விட்டது. மேலும் கோவில் திரு விழாக்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாலும் எலுமிச்சம் பழம் தேவை அதிகரித்துள்ளது.
மறுபக்கம் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச் சம் பழம் ஜூஸ் மக்கள் விரும்பி பருகி வருகின்றனர். இதனால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து உள்ளது.இதன் காரணமாக எலுமிச்சம் பழம் விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தென்காசி, பெங்களூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 4 டன் எலுமிச்சம் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
கடந்த மாதம் ஒரு எலுமிச்சம்பழம் ரூ.3 முதல் ரூ.7 வரை விற்பனையாகி வந்தது. தற்போது தேவை அதிகரித்து வரத்தும் குறைந்து உள்ளதால் கடந்த 10 நாட்களாள எலுமிச்சம் பழம் விலை அதிகரித்து உள்ளது.
இன்று வ. உ. சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் தென்காசி மற்றும் பெங்களூரில் இருந்து ஒரு டன் எலுமிச்சம் பழம் லோடு மட்டுமே வந்தது. இன்று ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ. 250-க்கு விற்பனையானது. ஒரு எலுமிச்சம்பழம் ரூ.7 முதல் முதல் ரூ.15 வரை விற்பனையாகி வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக எலுமிச்சம்பழம் வியாபாரம் மந்தமாக நடை பெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.