உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

டிப்பர் லாரி மோதி முதியவர் பலி

Published On 2022-04-07 14:06 IST   |   Update On 2022-04-07 14:06:00 IST
அந்தியூர் அருகே டிப்பர் லாரி மோதி பலியான முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே டிப்பர் லாரி மோதி பலியான முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்  பகுதியை சேர்ந்தவர் பகுதியை சேர்ந்தவர் பெத்தாகவுண்டர் (வயது 75). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பெத்தாகவுன்டர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை பெத்தாகவுண்டர் சைக்கிளில் கரடி நாயக்கனூருக்கு சென்று கொண்டிருந்தார். பிரம்மதேசம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக பெத்தாகவுண்டர் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காய மடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த பழைய மஞ்சாள நாயக்கனூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(32) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News