உள்ளூர் செய்திகள்
விற்பனைக்கு குவிந்துள்ள மாடுகள்.

கருங்கல்பாளையம் சந்தையில் விற்பனைக்கு குவியும் மாடுகள்

Published On 2022-04-07 13:52 IST   |   Update On 2022-04-07 13:52:00 IST
வறட்சியினால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாடுகளை வாங்கி செல்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:

வறட்சியினால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாடுகளை வாங்கி செல்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையானது வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, நேபாளம், மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் பசுமாடு 450, எருமை 250, கன்றுக்குட்டிகள் 50 என 750-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் வியாபாரிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வாங்கிச் செல்ல தயக்கம் காட்டியதால் விற்பனை பாதி அளவு மட்டுமே நடைபெற்றதாக சந்தை வியாபாரிகள் கூறினர்.

வறட்சியினால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாடுகளை வாங்கி செல்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருவதாக வியாபாரிகள் கூறினர்.

இது குறித்து மாட்டு சந்தை வியாபாரிகள் கூறியதாவது: கோடை காலத்தில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை வழக்கமாகவே அதிகரிப்பது வழக்கம்.

இந்தாண்டு வெயில் சுட்டெரிப்பதால் பசுந்தீவன ங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விவசாயிகள் உலர் தீவனங்கள் இருப்பு வைத்துள்ளதால் ஓரளவு சமாளித்து விடுகின்றனர்.

ஆனால் கால்நடை வளர்ப்போர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தினமும் உலர் தீவனங்கள் வாங்க ரூ.150 வரை செலவிட வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் வேறுவழியின்றி சந்தைக்கு விற்பதற்கு மாடுகளை அதிக அளவில் கொண்டு வருகின்றனர்.

ஆனால் சந்தையில் இருந்து வாங்கி செல்ல வியாபாரிகள் குறைவாகவே வருகின்றனர். குறிப்பாக கேரளா மாநில வியாபாரிகள் வருகை பா தியாக குறைந்து விட்டதால் சந்தையில் மாடுகள் விற்பனை பாதியாக குறைந்து விட்டது.  ஆனாலும் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News