உள்ளூர் செய்திகள்
பவானி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
பவானி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (52). தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். 85 வயதுடைய தாய் மற்றும் மனைவி, மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். தனது தாய் சர்க்கரை நோய் காரணமாக உடல்நலக்குறைவால் இருந்தவரை சரவணன் தினசரி பராமரித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு மனமுடைந்து காணப்பட்ட சரவணன் வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த மனைவி சரவணன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்தார்.
உடனே அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.