உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விபத்தில் பெண் பலி

Published On 2022-04-05 12:39 IST   |   Update On 2022-04-05 12:39:00 IST
ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக பலியானார்.
ஈரோடு:

ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக பலியானார். 

ஈரோடு அருகே உள்ள கஸ்பாபேட்டை பொன் நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சூரியகாந்தி (வயது 58). சூரியகாந்தி ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். 

சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக இவர் கஸ்பாபேட்டை&பூந்துறை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

 அப்போது ரோட்டை கடப்பதற்காக ரோட்டின் ஓரத்தில் சூரியகாந்தி நின்ற கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூரியகாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சூரியகாந்தி பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News