உள்ளூர் செய்திகள்
தீ

மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் தீயில் எரிந்து நாசம்

Published On 2022-04-04 15:40 IST   |   Update On 2022-04-04 15:40:00 IST
மூக்கனூர் கிராமத்தில் சென்றபோது டிராக்டரில் மின் கம்பி உரசிதயதால் திடீரென்று தீ பற்றி எரிந்தது.

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

இவருக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் சுருள் செய்து டிராக்டரில் ஏற்றிக் கொண்டு வட பொன்பரப்பி சென்றார். மூக்கனூர் கிராமத்தில் சென்றபோது டிராக்டரில் மின் கம்பி உரசிதயதால் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனால் டிராக்டரில் பயனம் செய்த டிரைவர் உள்பட அனைவரும் அலறி யடித்து ஓடினர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்தி வேல், மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமிபிள்ளை, சிவக்குமார், சங்கர் ஆகியோர் விரைந்து சென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வைக்கோல் டிராக்டரை போராடி தீயை அனைத்தனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Similar News