உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய
4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்தியமங்கலம் சப்&இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
.அப்போது சத்தியமங்கலம் பண்ணாரி மெயின் ரோடு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வாலண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (51), அய்யப்பன் (33), சதீஷ்குமார் (43), சிவகுமார்(43) என்பதும் அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள் ரூ.7,200 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.