உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2022-04-03 15:13 IST   |   Update On 2022-04-03 15:13:00 IST
கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் முனிராஜ் (21). லாரி டிரைவர்.

இவர் புதுக்கரை புதூர் பகுதியில் நடந்து வரும் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் சாணார் பாளையத்தில் உள்ள வீட்டுக்கு செல்வதற் காக வந்து கொண்டு இருந்தார்.

முனிராஜ் குட்டைய காட்டூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்த போது சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த கிருபா கரன் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

அப்போது அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள் கள் எதிர்பாரத விதமாக மோதி கொண்டது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே முனிராஜ் இறந் தார். கிருபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News