உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
டி.என்.பாளையம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம்- கொங்கர் பாளையம் ரோடு குமரன் கோவில் வீதி இந்திரா காலனியில் பங்களாப்புதூர் போலீசார் மற்றும் கவுண்டன் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மகுடேஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மண் ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
மேலும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் லாரியை சோதனை செய்த போது உரிய அனுமதி இல்லாமல் கொங்கர் பாளையத்தில் இருந்து 3 யூனிட் செம்மண் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து செம்மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் லாரி டிரைவர் அத்தியப்ப கவுண்டன் புதூரை சேர்ந்த சுந்தரம் (40) என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து கவுண்டன் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மகுடேஸ்வரன் பங்களாப் புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதில் லாரி உரிமையாளர் டி.ஜி.புதூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த இளங்கோ மற்றும் செம்மண் எடுக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் கொங்கர் பாளையம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என தெரிய வந்தது. அவர்கள் தலைமறை வாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.