உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2022-04-02 13:31 IST   |   Update On 2022-04-02 13:31:00 IST
சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சடைந்துள்ளனர்.
சென்னிமலை:

சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சடைந்துள்ளனர்.

சென்னிமலை அடுத்த பள்ளக் காட்டுப் புதூரை சேர்ந்தவர் அருண்குமார்(22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (22). எம்.சி.ஏ. பட்டதாரி. இவர் வேலை தேடி ஈரோடு வந்தார். தொடர்ந்து அவர்  ஒரு தனியார் நிறுவனத்தின் நேர்முக தேர்வில் கலந்து கொண்டார்.

அதே நிறுவனத்துக்கு அருண்குமாரும் நேர்முக தேர்வுக்கு வந்தார். அப்போது அருண்குமாருக் கும் உமா மகேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை யடுத்து இருவரும் பழகி வந்தனர். இந்த பழக்கம் காதலாக மாறியது.
இந்த நிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதை யடுத்து சென்னிமலை  ஊத்துக்குளி ரோடு அய்யம் பாளையம் பிரிவு பழனி ஆண்டவர் கோவிலில் 2 பேரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட னர்.

இது குறித்து 2 பேரின் பெற்றோருக்கும் தகவல் தெரிய வந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதையடுத்து காதல் ஜோடி அருண்குமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 
போலீசார் இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் உமா மகேஸ்வரி பெற்றோர் வரவில்லை. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி அருண்குமார் பெற்றோரி டம் சமரசம் பேசினார். 

இதையடுத்து அருண் குமாரின் பெற்றோர் அவர் களை அழைத்து செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் 2 பேரும் அருண் குமாரின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News