உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயம்
கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் தங்கமலை கரடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு சுபதர்ஷினி (16), சிந்துதேவி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர் களது மூத்த மகள் சுபதர் ஷினி கலிங்கியம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரு கிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக சதீஷ்குமார் ராணியை விட்டு பிரிந்து சென்று விட்டார். ராணியின் தங்கை பவானியை 2-வது திருமணம் செய்து கொண் டார். இவர்களுக்கு 2 மகள் கள் உள்ளனர்.
இந்த நிலையில் சதீஷ் குமார் தனது மோட்டார் சைக்கிளில் சுபதர்ஷினியை பள்ளிக்கு அழைத்து சென் றார். பள்ளி அருகே அவரை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு பள்ளிக்கு சுபதர்ஷினி வரவில்லை என சதீஷ்குமாரிடம் ஆசிரி யை போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். மேலும் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. அவர் எங்கு சென்றார் என தெரிய வில்லை.
இது குறித்து சதீஷ்குமார் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.