உள்ளூர் செய்திகள்
கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-04-01 16:40 IST   |   Update On 2022-04-01 16:40:00 IST
மூங்கில்துறைப்பட்டு அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:

 மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரங்கப்பனூர் ஏரிக்கரை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் குப்புசாமி (வயது 22) என்பதும், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குப்புசாமியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News