உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலி

Published On 2022-03-29 17:04 IST   |   Update On 2022-03-29 17:04:00 IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்தவர் கருணாநிதி (53). இவர் கொடுமுடி அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கொடுமுடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் நொய்யல் நோக்கி சென்று கொண்டு இருந்தார். 

அள்போது பழைய சோளக்காளிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தவறி அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்தார். 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கருணாநிதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் இறந்த கருணாநிதி உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News