உள்ளூர் செய்திகள்
அந்தியூர் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர் அடுத்த பருவாச்சி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (58). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று பருவாச்சி பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கி ளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பருவாச்சி& புன்னம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே பழனிச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அவரது மனைவி சரசாள் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பருவாச்சி பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் முக்கிய இடங் களில் ஒளிரும் எச்சரிக்கை விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும் என்று பருவாச்சி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.