உள்ளூர் செய்திகள்
கல்வராயன்மலையில் கடும் வறட்சி- நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கச்சிராயப்பாளையம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நீர்வீழ்ச்சிகளில் பெரியார் நீர்வீழ்ச்சி தவிர மற்ற எந்த நீர் வீழ்ச்சிக்கும் சாலை வசதிகள் இல்லை.
பெரியார் நீர்வீழ்ச்சிக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் சென்று குளித்து வருவார்கள். தற்போது கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஆனால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நீர்வீழ்ச்சிகளில் பெரியார் நீர்வீழ்ச்சி தவிர மற்ற எந்த நீர் வீழ்ச்சிக்கும் சாலை வசதிகள் இல்லை.
பெரியார் நீர்வீழ்ச்சிக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் சென்று குளித்து வருவார்கள். தற்போது கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஆனால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.