உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-29 16:05 IST   |   Update On 2022-03-29 16:05:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்கராபுரம்:

சங்கராபுரத்தில் மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தொ.மு.ச. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.

மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரம் திருத்த சட்டம் மற்றும் பொதுத்துறை விற்பனையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Similar News