உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குட்டையில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2022-03-29 12:40 IST   |   Update On 2022-03-29 12:40:00 IST
சென்னிமலை அருகே குட்டையில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே குட்டையில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய் பாளையம் அடுத்த சின்னேகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). சென்ட்ரிங் தொழிலாளி.  இவரது மனைவி வைதேகி. இவர் களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில்  சதீஷ் குமார் மற்றும் ஊத்துக்குளி ஆர்.எஸ் அடுத்த ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் சதீஷ்குமார், சிவசாமி மற்றும் நண்பர்களுடன் சென்னிமலை அருகே  உள்ள அய்யம்பாளையம் முதலைமடை பகுதிக்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் அருகே உள்ள எல்.பி.பி., கசிவு நீர் குட்டையில்  குளித்தனர். இதில் சின்னே கவுண்டன் பாளையத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சதீஷ்குமார் குட்டையின் நடுப்பகுதிக்கு சென்று குளித்து கொண்டு இருந்தார். 

  மற்றவர்கள் குட்டையின் ஓரத்தில் குளித்து கொண் டிருந்தனர். நீண்ட நேர மாகியும் சதீஷ்குமார் கரைக்கு வரவில்லை.  இதையடுத்து அவர்கள் சதீஷ்குமாரை குட்டையில்  தேடினர். ஆனால் அந்த பகுதியில் அவர் இல்லை.

இதையடுத்து அவர்கள் சத்தம் போட்டு அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் இது குறித்து கூறினர். பொது மக்கள் வந்து குட்டையில் சதீஷ்குமாரை தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குட்டையில் தேடினர். நீண்ட நேரத்துக்கு பிறகு சதீஷ்குமார் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமார்  உடலை கைப்பற்றி பெருந் துறை அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News