உள்ளூர் செய்திகள்
திருநாவலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மாணவி-சிறுவன் பலி
திருநாவலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மாணவி மற்றும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை. விவசாயி. இவரது மகள் வாசுகி (வயது 7).
வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த வாசுகி எதிர்பாராதவிதமாக அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் சிறுமி நீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாசுகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இதேபோல திருநாவலூர் அருகே உள்ள ஆதிநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் மணிகண்டன் (8). இந்த சிறுவன் தனது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் ஏறிய போது தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை. விவசாயி. இவரது மகள் வாசுகி (வயது 7).
வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த வாசுகி எதிர்பாராதவிதமாக அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் சிறுமி நீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாசுகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இதேபோல திருநாவலூர் அருகே உள்ள ஆதிநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் மணிகண்டன் (8). இந்த சிறுவன் தனது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் ஏறிய போது தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.