உள்ளூர் செய்திகள்
கல்வராயன் மலையில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

கல்வராயன் மலையில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

Published On 2022-03-28 16:53 IST   |   Update On 2022-03-28 16:53:00 IST
கல்வராயன் மலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கச்சிராயப்பாளையம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை உள்ளது. இந்த கல்வராயன் மலையில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் ஒரு அடர்ந்த வனப்பகுதியாக 1100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது.

இந்த கல்வராயன் மலையில் கரடி, மான், காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளும் அரியவகை மூலிகைகள் நிறைந்த செடிகள் விலை உயர்ந்த மரங்கள் உள்ளது.

கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில் கள்ளக்குறிச்சி, சேராப்பட்டு, வெள்ளிமலை, இன்னாடு, கோமுகி, பாலப்பட்டு, என வனச்சரகங்கள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் வனவிலங்குகள் மற்றும் கல்வராயன்மலை வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கல்வராயன் மலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் வனவிலங்குகள் ஆர்வலர் மற்றும் தன்னார்வலர் கீர்த்தி தலைமையிலான குழுவினர் மற்றும் வனத்துறை ரேஞ்சர் கோவிந்தராஜ் தலைமையிலான வனக்காவலர்கள் மணிகண்டன்,

செல்வராஜ், அக்சயசாமி, சதேஷ்குமார், ராம்குமார்,.சரவணகுமார், சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையின ரும் இணைந்து கல்வராயன் மலையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News